Monday, May 29, 2023
Home » மேன்கைண்ட் பார்மா நிறுவனத்தில் ஐடி ரெய்டு

மேன்கைண்ட் பார்மா நிறுவனத்தில் ஐடி ரெய்டு

by Karthik Yash

புதுடெல்லி: மருந்து உற்பத்தி நிறுவனமான மேன்கைண்ட் பார்மாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புகழ்பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான மேன்கைண்ட் பார்மா இந்திய பங்குச் சந்தையில் செவ்வாயன்று இந்திய பங்குச் சந்தையில் அறிமுகமாகியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் ஆவணங்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது’’ என தெரிவித்தனர். கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மருந்துகள், உடல் நலன் பாதுகாப்புக்கான பொருள்களையும் தயாரிக்கிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi