புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் மனைவி சீமா உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 2020ம் ஆண்டு கடுமையான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது மூளை கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதற்காக இவர் கடந்த 23 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் மணீஷ் சிசோடியா டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் இவரை கவனித்து கொள்ள ஆளில்லை. இதற்கு முன்பு, இவர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மணீஷ் சிசோடியா மனைவி மருத்துவமனையில் அனுமதி
previous post