சென்னை: மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்வது ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தில் உள்ளபோது மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக பாஜக காட்டிக்கொள்கிறது எனவும் 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் வடிக்கப்படும் முதலைக்கண்ணீர் எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.