சென்னை: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாமல் பிரதமர் மோடி வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று அமைதியை ஏற்படுத்த முயற்சிக்காதது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.