சூரசந்த்பூர்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக் கலவரத்தால் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன்தினம் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தருண் குமார் சூரத்சந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.