மணிப்பூர்: மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததை அடுத்து மணிப்பூர் மாநிலத்தின் 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதினர். பாஜகவின் பிரித்தாளும் அரசியலே மணிப்பூரின் இந்த நிலைக்கு காரணம் என எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.