டெல்லி: மணிப்பூரில் இருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.