மணிப்பூர்: மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உக்ருல் மாவட்டத்தில் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டத்தில் மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டால் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் பீதியுடன் அரங்கை விட்டு வெளியேறினர். மணிப்பூரின் சுரத்சம்பூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மோதல் நடைபெற்றுள்ளதாக நாகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.