Sunday, May 12, 2024
Home » மான நஷ்ட ஈடு வழக்கில் வேறுஒரு தேதியில் ஆஜராக உள்ளதாக சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தகவல்

மான நஷ்ட ஈடு வழக்கில் வேறுஒரு தேதியில் ஆஜராக உள்ளதாக சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தகவல்

by MuthuKumar

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சையான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.15 கோடி மானநஷ்ட்ட ஈடு கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்க கூடிய மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது. அதனை ஏற்ற தனி நீதிபதி அதற்கான விலக்கு அளித்தார். இந்த நடைமுறை அவரது வீட்டில் மேற்கொள்ள வழக்கஞர் ஆணையர் ஒருவரையும் நியமித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எடப்பாடி பழனி சாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என அறிவித்ததை தொடர்ந்து, ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்த நிலையில் நேற்று மாஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு பட்டியலிடப்படவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை. ஆனால் இன்று இந்த வழக்கு பட்டியலிடபட்டிருந்தது. இந்த நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க கூடிய மனுவில் சில கருத்துவகளை நாங்கள் நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே வேரொரு தேதியில் ஆஜராக இருப்பதாகவும் எனவே இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். இதனை அடுத்து மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி இந்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி அந்த வழக்கு முடிந்த பிறகு ஆஜராக தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

18 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi