சென்னை; சென்னை சின்னமலையில் மாநகர பேருந்து ஓட்டுநர் பரமசிவம் (45) என்பவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்டோவுக்கு வழிவிடவில்லை எனக் கூறி மாநகர பேருந்து ஓட்டுநர் பரமசிவம் மீது சரண்ராஜ் தாக்குதல் நடத்தியுள்ளார். போதையில் தாக்குதலில் ஈடுபட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ் (24) என்பவரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.