Saturday, May 25, 2024
Home » மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ முன் ஆஜர்

மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ முன் ஆஜர்

by Karthik Yash

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் முதல்வர் மம்தாவின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அபிஷேக் பானர்ஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடந்தது.முன்னதாக அபிஷேக் பானர்ஜி சிபிஐ இயக்குனருக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில், “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் 19ம் தேதி பிற்பகலில் எனக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 20ம் தேதி காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று 19ம் தேதி பிற்பகலில் எனக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மிக குறுகிய நேரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi