Friday, May 17, 2024
Home » மாமல்லபுரத்தில் அதிமுக பிரசாரம்; இவ்ளோ நேரம் காத்திருந்ததற்கு ₹100 தானா..? பெண்கள் கொந்தளிப்பு

மாமல்லபுரத்தில் அதிமுக பிரசாரம்; இவ்ளோ நேரம் காத்திருந்ததற்கு ₹100 தானா..? பெண்கள் கொந்தளிப்பு

by MuthuKumar

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற அதிமுக பிரசாரக் கூட்டத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பெண்களுக்கு ₹100 வழங்கப்பட்டது. இதனால் கொந்தளித்த பெண்கள் அதிமுக நிர்வாகிகளிடம் ஆவேசத்துடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து, மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

எனினும், இங்கு குறிப்பிட்ட நேரத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரத்துக்கு வரவில்லை. சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் மாலை 5.30 மணியளவில் பிரசாரத்துக்கு வந்துள்ளார். அவருடன் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குட்டி (எ) நந்தகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்துக்கு வந்தனர். பின்னர், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழியை மறித்து அதிமுக வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், தேங்காய் உடைத்தும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர் இங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கிளம்பி சென்றனர். எனினும், அங்கு அதிமுக தேர்தல் பிரசாரப் பணிக்காக அழைத்து வரப்பட்டு, தாம்பூல தட்டு மற்றும் கட்சிக்கொடியுடன் நீண்ட நேரம் காத்திருந்த பெண்களுக்கு ₹100 மட்டுமே அதிமுக நிர்வாகிகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமான பெண்கள், அதிமுக நிர்வாகிகளிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு அழைத்து வருவதற்கு முன், அப்பெண்களிடம் தேர்தல் பிரசார பணிக்கு ₹500 தருவதாக அதிமுக நிர்வாகிகள் ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்ததாக ஏராளமான பெண்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

11 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi