கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவிற்கு அழைத்து செல்லப்பட்ட யானை ஒன்று பாகனுக்கு கட்டுப்படாமல் வழியில் இருந்த வாய்க்காலில் இரங்கி வெகுநேரம் குளித்ததை கண்டு பலரும் வியப்படைந்தனர். மலப்புரம் மாவட்டம் வெளியன்கொடு கிராமத்திற்கு அலங்காரத்துடன் அழைத்து செல்லப்பட்ட அந்த தண்ணீரை கண்டதும் இரங்கி குளிக்க ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பேகன் கோவில் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் வெளியே வா என்று கெஞ்சினார். ஆனால் அந்த யானை அவரை சட்டை பண்ணாமல் வெகு நேரமாக தண்ணீரில் உருண்டு பிரண்டு குளித்து மகிழ்ந்தது. இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர்.