மதுரை: மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் ரூ.420 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பாலை பகுதியில் கால்நடை மருத்துவமனையை திறந்து வாய்த்த பின் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.