மதுரை: மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தடை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரை ரயில் பெட்டிக்குள் எடுத்து வந்தது எப்படி? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை செய்யப்படும் நிலையில் சிலிண்டர் வந்தது எப்படி என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.