மதுரை: மதுரை அருகே மேலூர், அழகர்கோவில், கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிய நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் சுற்றுவட்டார பகுதிகளான விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.