மதுரை: மதுரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவு அளித்துள்ளனர். டெங்கு கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேவையற்ற பழைய பொருள்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த காரணத்தால் அபராதம் விதித்துள்ளனர். தேவேந்திரன் ஒர்க்ஷாப் நிறுவனத்துக்கும் மதுரை மாநகராட்சி ரூ.10,000 அபராதம் விதித்தது.