மதுரை: மதுரையில் ரூ.10 லட்சம் பெற்றுத் தருவதாக கூறி தம்பதியை வரவழைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. திருமங்கலம் சாத்தன்குடியை சேர்ந்த உதயபாண்டி, மனைவி காயத்ரியை மாட்டுத்தாவணிக்கு வரவழைத்து பணம் பறித்துள்ளனர். கடன் பெற்றுத்தர முன்பணமாக ரூ.3 லட்சம் தரவேண்டும் எனக்கூறி பணத்துடன் தம்பதியை வரவழைத்து கொள்ளையடித்துள்ளனர்.