சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழுவில் வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.