போபால் : மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை, ரயில் சேவையிலும் பாதிப்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.