சென்னை: லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் செப்.12-ல் நடிகர் விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். லைக்காவுக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.