தர்மபுரி, டிச.31: கம்பைநல்லூர், அண்ணாமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30), லாரி டிரைவர். திருமணமாகவில்லை. வெளி மாநிலங்களில் லாரி ஓட்ட செல்லும் இவர், 2 வாரங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த 10ம் தேதி லாரி ஓட்ட சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுபற்றி அவரது அண்ணன் சவுந்தர் அளித்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பாலக்கோடு மூங்கம்பட்டியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன் மகள் மகாலட்சுமி. அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், நஞ்சுண்டன் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.