டெல்லி: மக்களவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்காக தமிழகத்திற்கு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தர கேட்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு படிப்படியாக பயிற்சியளிக்கப்படுகிறது என சத்யபிரதசாகு தெரிவித்திருக்கிறார்.