மதுரை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழ்நாடு வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர், நெல்லையில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இரவு 7 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்