சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ‘தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு’ ஆதரவு அளித்துள்ளனர். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின்’ மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்