புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான பாஜ கட்சியின் பிரசார பாடல் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி முன்னிலையில் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அதை வெளியிட்டார். அந்த பாடலில், நாடு மோசமான நிலையில் இருந்த போது நாட்டு மக்களுக்கு மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். பிரதமரான பிறகு, அந்த வாக்குறுதிகளை மோடி எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை சொல்லும் விதமாக உள்ளது.
இது கனவு அல்ல, நிஜம், அதனால்தான் ஒவ்வொருவரும் மோடியை தேர்ந்தெடுக்கின்றனர் என்று பாடல் வரிகள் உள்ளன. இதுகுறித்து ஜே.பி.நட்டா பேசுகையில்,‘‘மக்களின் கனவுகளை மோடி நிஜமாக்குகிறார். பல தலைமுறைகளாக இருந்த வாக்குறுதிகள்,கனவுகள்,500 ஆண்டுகளுக்கு பின்னுக்கு செல்லும் கனவுகள் கூட அவரால் நிறைவேற்றப்படுகின்றன’’ என்றார்.