டெல்லி: மக்களவைத் தேர்தலில் பானை சின்னம் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இன்று பிற்பகல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.