கடலூர்: கடலூர் அருகே உள்ள கோதண்டராமாபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது 13 வயது மகள், கடந்த சில நாட்களுக்கு முன் சளிக்கு சிகிச்சை பெறுவதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு தனது தந்தையுடன் சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர், மருந்து மாத்திரைகளும், ஊசி போடவும் சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சீட்டை கருணாகரன் அங்குள்ள செவிலியரிடம் கொடுத்த போது அவர் சீட்டை சரியாக கவனிக்காமல் நாய் கடிக்கு போட வேண்டிய ஊசியை போட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கருணாகரன் புகார் அளித்தார். இந்நிலையில், செவிலியர் கண்ணகி (45) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.