Friday, May 31, 2024
Home » தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மது கொள்முதல் விவரங்களை கேட்பதில் இருந்து எந்த அடிப்படையில் விலக்கு கோர முடியும்? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மது கொள்முதல் விவரங்களை கேட்பதில் இருந்து எந்த அடிப்படையில் விலக்கு கோர முடியும்? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பன குறித்த விவரங்களையும் கேட்டு, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்து விட்டது.

இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் இச் சட்டப்பிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது. இந்த தகவல்கள் விலக்கு பெற்றவை என்று வாதிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது. மதுபானம் கொள்முதல் செய்ய எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை. நேரடியாக உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்று கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் விலக்கு பெற்றவை என்று விளக்கமளிக்குமாறு டாஸ்மாக் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

15 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi