டெல்லி: மக்களவை தேர்தலில் பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டு மேல்முறையீடு. ஒரு சதவீதம் வாக்குகளை கூட பெறாததால் வி.சி.க.வுக்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.