டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மத அமைப்புகள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க வரும் 14ம் தேதி கடைசி நாள். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு ஒருபுறம் தீவிரம் காட்டிவர, அதேவேளையில் இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.