சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.