சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சீர்மிகு சட்டப் பள்ளியில் இயங்கி வரும் இடைநிலை படிப்புகள் மற்றும் சமவாய்ப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் இன்றும் நாளையும் சர்வதேச அளவில் மாநாடு நடக்க இருக்கிறது. மாநாட்டுக்கு சட்டப்பல்கலைக் கழக துணைவேந்தர் கர்னல் சந்தோஷ்குமார் தலைமை தாங்குகிறார். திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெரஞ்சன் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார்.
சிறப்பு விருந்தினராக இலங்கையில் உள்ள ஜாப்னா பல்கலைக்கழக மூத்த பேராசிரியரும் கல்வித்தலைவருமான முனைவர் நிமலதாசன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பேராசிரியர் ஜோதிசிவஞானம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பெறப்படும்.