சென்னை: குவைத் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு அந்த நாட்டில் தவித்து வரும் 20 தமிழர்களையும் மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்களாக குவைத் சென்ற 20 பேரின் கடவுச்சீட்டை நிறுவனம் பறித்து வைத்துள்ளது. சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், தங்க இடமின்றி, உண்ண உணவின்றி 20 பேரும் தவிக்கின்றனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.