கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கோங்கல் பகுதியில் நள்ளிரவில் திலீப்குமார் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் சக்திவேல் என்பவரை கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த திலீப்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.