Thursday, May 16, 2024
Home » குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

by Lakshmipathi

*ஒரு மாதத்தில் பரிதாபம்

குலசேகரம் : குலசேகரம் அருகே காதல் மனைவி இறந்த ஒரு மாதத்தில், துக்கம் தாளாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குலசேகரம் அருகே உள்ள மணலோடை, புறாவிளை மலைவாழ் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன். கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயா (36) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஜெனிஷா (20) பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஜெனிஷை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2 பேரும் அந்த பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்தனர். ஜெனிஷ் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். ஜெனிஷா திருநந்திக்கரை பகுதியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் ஜெனிஷா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், ஜெனிஷா சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பழங்குடியின மக்கள், பொதுமக்கள் குலசேகரம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி ஜெனிஷாவின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் காதல் மனைவி இறந்ததில் இருந்தே ஜெனிஷ் மிகுந்த மனவேதனையில் இருந்து உள்ளார். யாரிடமும் சரியாக பேசாமலும், சரிவர சாப்பிடாமலும் ஜெனிஷ் இருந்தாராம். காதல் மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்லவேண்டும் என்று ஜெனிஷ் தீர்மானித்துள்ளார். அதன்படி இருதினங்களுக்கு முன் மதியம் வீட்டுக்கு கையில் விஷமருந்துடன் வந்து உள்ளார்.
பின்னர் திடீரென விஷத்தை சாப்பிட்டு துடிதுடித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஜெனிசை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிஷ் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். காதல் மனைவி இறந்த ஒரு மாதத்திலேயே கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

nine − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi