சென்னை: நாளை நடக்க உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அணுமின் உற்பத்திக் கழகம் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியிருக்கிறார். ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக நடக்க உள்ள சி பிரிவு பணியாளர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார்.