நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் ஆஜரானார். கோவையில் சிபிசிஐடி போலீசார் முன்பு தனபால் விசாரணைக்கு ஆஜரானார். சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகள் பட்டியலை சமர்பிக்க உள்ளார். சிபிசிஐடி போலீசிடம் தரும் பட்டியலில் உள்ளவர்களை விசாரிக்க தனபால் கோரிக்கை வைக்க உள்ளார்