கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், கொடைக்கானலில் நிலவிய இதமான சூழல் குளிர்ச்சியான சூழலாக மாறியது.
நேற்று முன்தினம் கொடைக்கானலில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.