Wednesday, May 15, 2024
Home » கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிக்கு ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிக்கு ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் கரியண்ணனவர் உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படம் 2014-ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவை சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையுடன், தமிழ்நாட்டில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி படவெளியீட்டு உரிமையை தங்களுக்கு வழங்காமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையையும் முழுமையாக திருப்பித்தரவில்லை எனக்கூறி ஆட்பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹார், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2015-ல் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது லதா ரஜினிகாந்த் வரும் 2024 ஜனவரி 6ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஆனந்த் கரியண்ணனவர் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் டிசம்பர் 26ம் தேதி லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக அவரது தரப்பு வக்கீல் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதையேற்ற நீதிபதி வரும்படி அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று நீதிபதி ஆனந்த கரியண்ணனவர் முன்னிலையில் விசாரணைக்கு அப்போது லதா ரஜினிகாந்த், அவரது வக்கீலுடன் வந்து ஆஜரானார். பின் அவருக்கு ஜாமீன் வழங்கும்படி வக்கீல் மனு தாக்கல் செய்தார். அதையேற்று கொண்ட நீதிபதி, ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 நபர் பிணையில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்வதாகவும் நீதிமன்றம் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கும் முயற்சி மேற்கொள்ளக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

seventeen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi