சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்குகிறது. எடப்பாடி பழனிசாமியை அழைத்துச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வசதிகளை காண்பிக்க தயார் என்றும் கூறினார்.