கேரளா: கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெயக்சி தாமஸை சாண்டி உம்மன் தோற்கடித்தார். சாண்டி உம்மன் 78,098 வாக்குகள், ஜெய்க்சி தாமஸ் 41,644 வாக்குகள், பா.ஜ.க. வேட்பாளர் லிஜின் லால் 6,447 வாக்குகள் பெற்றனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவை அடுத்து புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.