கேரளா: கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் கொடகரா காவல் நிலையத்தில் டோமினிக் மார்ட்டின் சரணடைந்தார். குண்டு வைத்ததாக சரணடைந்த டோமினிக் மார்ட்டின் யெகோவா சாட்சிகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்த டோமினிக் மார்ட்டினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.