திருவனந்தபுரம்: “மதச்சார்பின்மை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை, ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.