மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகிலுள்ள குட்டிப்புரத்தில் காய்ச்சலால் இறந்த 13 வயது சிறுவன் எச்1என்1 வைரஸால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டிப்புரம் அருகே பைங்கன்னூரைச் சேர்ந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில், மாவட்ட சுகாதார அலுவலர் ஆர்.ரேணுகா எச்1என்1 வைரஸ் தொற்று காரணமாக மரணம் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.