டெல்லி: தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம். கெஜ்ரிவால் மீதான வழக்கில் சொத்து முடக்கம் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.