காசா: சர்வதேச போர் நெருக்கடி குழுவின் ஐ.நா இயக்குனர் ரிச்சர்ட் கோவன் அளித்த பேட்டியில், ‘இதுபோன்ற போர் நெருக்கடியானது, நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. போரை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது மிகவும் சவாலான விசயமாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார்’ என்றார். ஆனால் ஜோர்டன், எகிப்து, பாலஸ்தீனிய தலைவர்கள் சந்திப்பு ரத்தானதால், அது அமெரிக்க அதிபரின் பயணத்தில் தோல்வியை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.