சென்னை: தண்ணீர் தேங்கும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பகுதியில் 12 கோடியில் கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பகுதியில் தண்ணீர் தேங்குவதை முற்றிலுமாக தடுக்க கால்வாய் அமைக்க திட்டம் அமல்படுத்தப்படும். மழைநீர் தேங்கியதாக எழுந்த புகாரில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.