டெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை14க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.