பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தலில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார். தேர்தலில் தோற்றாலும் தமது போராட்டம் தொடரும் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.